0
வான மகள் முகம் திருப்பி
நாணம் மறந்து அவதியுற
கொட்டும் பனியிலும் தன்
ஒட்டு மொத்த உடை களைந்து
பட்டு விட்டதென்று நாம்
ஏங்கி தவிர்த்த மரமெல்லாம்
சட்டென்று மொட்டு விடும்
சாகச விந்தை தனை
என்னவென்று சொல்லுவது
சின்ன செரி மரமொன்று
வண்ணப் புடைவ கட்டி
கண்ணைச் சிமிட்டி -தன்
வெண் பல் வருசை காட்டி
எண்ணற்ற மாலையுடன்
எழந்து நின்று சுழன்று
எமுந்த கதிரவனை
மதி மயங்க செய்யும்
கண்ணை பறிக்கும்
காட்சி காண
விமானம் ஏறி வந்திடுவீர்
– சுகந்தி தமிழ்வாணன் –