எழுத்தாளர், கவிஞர், திறனாய்வாளர், வாசகர் என்ற பன்முக ஆளுமை கொண்டவராக, தமிழிலும், ஆங்கிலத்திலும், இலக்கியம், திரைப்படம் முதலிய வெவ்வேறு களங்களில் இறுதிமூச்சுவரை செயற்பட்டு நிறைவாழ்வு கண்டு அண்மையில் மறைந்த, கே.எஸ்.சிவகுமாரன் அவர்களது நினைவாக நடத்தப்படவுள்ள, “கே.எஸ்.சிவகுமாரன் வாழ்வைக் கொண்டாடுதல்” என்ற மெய்நிகர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
இந்நிகழ்ச்சியில், மெல்பேணிலிருந்து, மூத்த எழுத்தாளர் லெ.முருகபூபதி, எழுத்தாளர், மருத்துவர். நோயெல் நடேசன், சிட்னியிலிருந்து எழுத்தாளர், சட்டத்தரணி, சந்திரிகா சுப்பிரமணியம், எழுத்தாளரும், ஒலிபரப்பாளருமான கானா பிரபா, இலங்கையிலிருந்து, பேராசிரியர் மௌனகுரு, கவிஞர் பூர்ணிமா கருணாகரன், எழுத்தாளரும் பத்திரிகையாளருமான செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் மற்றும் பேராசிரியர் மு. நித்தியானந்தன் ( இலண்டன்), கவிஞரும், ஒலிபரப்பாளருமான கோவிலூர் செல்வராஜன் (இலண்டன்), ஊடகவியலாளர் வரதராசா மரியாம்பிள்ளை (நியூசிலாந்து) முதலிய பலர் இந்த நிகழ்ச்சியில், அமரர் கே.எஸ்.சிவகுமாரன் அவர்களைப்பற்றிக் கருத்துரையாற்றவுள்ளார்கள்.
காலம்: 15.10.2022, சனிக்கிழமை
இலங்கை நேரம்: பி.ப. 2.30 மணி.
அவுஸ்திரேலிய நேரம்: இரவு 8.00 மணி
இங்கிலாந்து நேரம்: மு.ப. 10 மணி
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள Zoom இணைப்பு:
https://us02web.zoom.us/j/84185296033?pwd=Nk42STFLeTFRY04wTlNhYWNweWN1QT09
அல்லது:
தொடர்பு இல: 841 8529 6033
கடவுச் சொல்: 677724
அன்புடன்,
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கத்தின் சார்பில்,
சு.ஸ்ரீகந்தராசா
இணைப்பாளர்