முள்ளிவாய்க்கால் கஞ்சி
எங்கள் மூச்சை காத்தது
உப்பில்லாத கஞ்சி
எங்கள் உயிரைக் காத்தது
வலிகள் சுமந்த நாட்கள்
மறக்க முடியா நினைவு
சிலுவை சுமந்த காலம்
கனவு தொலைந்த சோகம்
பொழுது விடியா நேரம்
பசியில் அழுத குழந்தை
பால் சுரக்கா முலைகள்
எத்தனை தாயின் ஓலம்
சொல்ல முடியா துயரம்
எங்கள் துன்பம் சுமந்த வாழ்வு
சிலுவை காவிப் போனோம்
கல்வாரி மலையை நோக்கி
நிலவு மறையும் நேரம்
தொலைந்து போன உறவு
எங்கு சென்றாய் மகனே
எத்தனை தாயின் கண்ணீர்
இன்னும் ஏங்கும் இதயம்
எவரும் காண சோகம்
எத்தனை துன்பம் சுமந்தோம்
மறந்து போக முடியா
எங்கள் வாழ்வின் கதைகள் இவைகள்.
-பா.உதயன் ✍️