Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் மரிக்கும் பறவையின் குரல் | வசந்ததீபன்

மரிக்கும் பறவையின் குரல் | வசந்ததீபன்

0 minutes read


சுழித்தோடும் உன் புன்னகை
நெளிந்தாடும் உன் புருவங்கள்
சுழலுள் சிக்கிய துரும்பானேன் நான்
ஆறப்போடு
ஊறப்போடு
அப்படியே தூக்கி தூரப்போடு
படிக்கிறேன்
திரும்பத்திரும்ப படிக்கிறேன்
விளங்க முடியாத கவிதை வாழ்க்கை
நிழல் தரும் மரங்களில் இலைகளில்லை
அழகு மிளிரும் செடிகளில் பூக்களில்லை
உதிர்காலத்தில் உழல்கிறது கனவிலான வாழ்வு
ஒரு மிடறு குடித்தான்
வேதனையின் காரணிகள் நிழலாடின
அடுத்த மிடறு
அவனைக் குடித்துவிட்டது
நந்தவனத்திலோர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய் செய்த தோண்டி கூத்தாடிக் கூத்தாடி பட்டென்று உடைந்தாண்டி
நீ வந்த போது நான் இல்லை
நான் வந்த போது நீ இல்லை
நமது காலடித்தடங்கள் மட்டுமாவது சந்தித்திருக்கலாம்
உக்கிரமான கோபம்
கனவுகளை எரிக்கிறது
நாமெல்லாம் மெளனமாகத் தான் வாழ்கிறோம்.

வசந்ததீபன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More