Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் வெள்ளரிக்காயால் ஏற்படும் ஆபத்தை அறிந்து கொள்ளுங்கள்!

வெள்ளரிக்காயால் ஏற்படும் ஆபத்தை அறிந்து கொள்ளுங்கள்!

2 minutes read

 

அதிக குளிரிச்சியைக் கொடுக்கும் வெள்ளிரிக்காய் நமது அன்றாட வாழ்வில் பல நன்மைகளை வழங்குகிறது.

வெள்ளரிக்காய் உணவுகளில் இருந்து அழகுசாதன பொருட்கள் வரை பல வழிகளில் நமக்கு உதவுகிறது. எவ்வளவுதான் நன்மைகளை வழங்கினாலும் வெள்ளரிக்காயில் சில பக்க விளைவுகளும் இருக்கத்தான் செய்கிறது.

வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிடுவதால் மிதமானது முதல் மோசமான பக்க விளைவுகள் வரை ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இங்கு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படலாம் என்று பார்க்கலாம்.

வெள்ளரிக்காயில் குக்குர்பிடசின்கள் மற்றும் டெட்ராசைக்ளிக் ட்ரைடர்பெனாய்டுகள் போன்ற நச்சுகள் இருப்பது மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும். வெள்ளரிக்காயில் இருக்கும் சிறிது கசப்பான சுவைக்கு இந்த நச்சுக்கள்தான் காரணம். இந்த நச்சுக்களை அதிகளவு எடுத்துக்கொள்வது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

 கர்ப்ப காலத்தில் வெள்ளரிக்காய் பொதுவாக பாதுகாப்பானதாகக் கருதப்பட்டாலும், வெள்ளரிகள் அதிகமாக உட்கொண்டால் உங்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த காய்கறிகளின் டையூரிடிக் தன்மை அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தூண்டும், இதனால் உங்களுக்கு எரிச்சலும், சங்கடமும் ஏற்படும். வெள்ளரிகள் நார்ச்சத்து அதிகமுள்ள ஒன்றாகும், எனவே இதனை அதிகமாக சாப்பிடுவது உங்களை வீக்கமடையச் செய்யலாம்.

வெள்ளரி விதைகள் கக்கூர்பிட்டின் மூலமாகும், இது உள்ளார்ந்த டையூரிடிக் பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. டையூரிடிக் இயல்பு லேசானதாக இருந்தாலும், அதிகப்படியான உட்கொள்ளல் உங்களுக்கு குறைவான தீங்கு விளைவிக்கும்.

பெரிய அளவில் உட்கொள்ளும்போது, இந்த டையூரிடிக் பொருட்கள் உங்கள் உடலில் இருந்து அதிகப்படியான திரவத்தை வெளியேற்றி உங்கள் உடலின் எலெக்ட்ரோலைட்டுகளின் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது அதிகரிக்கும்போது உங்கள் உடலில் நீர்சத்து முழுவதுமாக இருக்காது.

வெள்ளரிக்காயில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது. அதிக மது அருந்தும் பழக்கம் இதை அதிகம் சாப்பிட தூண்டக்கூடும்.

அதிகளவு நீர் இருப்பது, இரத்தத்தின் நிகர அளவை அதிகரிக்கும். இதனால் இரத்த நாளங்களிலும், இதயத்திலும் அழுத்தம் ஏற்படும். இதனால் உங்கள் இதயம் மற்றும் இரத்த நாளங்கள் தேவையற்ற சேதங்களை ஏற்படும்.

இதில் இருந்து பாதுகாப்பு பெறவேண்டுமாயின் :

வெள்ளரிக்காயை ஓடும் நீரின் கீழ் நன்கு கழுவ வேண்டும். வெள்ளரிக்காயின் நச்சுத்தன்மையில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவதை உறுதி செய்யவும். பச்சை வெள்ளரி சாப்பிடுவது உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தினால் அதனை வேகவைத்து அல்லது வறுத்து சாப்பிடவும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More