Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஒலிம்பிக்கில் கொரோனா பரிசோதனைக்கு எச்சிலை துப்பிக் கொடுத்தால் போதும்

ஒலிம்பிக்கில் கொரோனா பரிசோதனைக்கு எச்சிலை துப்பிக் கொடுத்தால் போதும்

1 minutes read

டோக்கியோ 2020 ஒலிம்பிக் விழாவுக்கு வருகைத தந்துள்ள அனைவருக்கும் தினந்தோறும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகன்றது. 

இதில் எவருக்கேனும் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தால் அந்த நபர் உடனடியாக 14 நாட்களுக்க தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்றார்.  தேவையேற்படின் சிகிச்சையளிக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்.

இந்தப் பரிசோதனையானது வீரர்கள் தங்கியுள்ள ஒலிம்பிக் கிராமத்திலும் ஊடகவியலாளர்கள் கடமையாற்றும் ஊடக நிலையத்திலும் மேற்கொள்ப்படுகின்றது. 

இதில் வளமையான பி,சீ,ஆர், முறையோ அல்லது  அன்டிஜன் முறையோ அல்ல. மருத்துவ பிரிவினால் வழங்கப்படும் ஒரு சிறு பிளாஸ்டிக் குழாயில் எச்சிலை சிறிது நிரப்பி கொடுக்க வேண்டும். அது பின்னர் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படும், அரைமணித்தியாலய இடைவெளியில் பரிசோதனைகள் முடிவுகள் வந்துவிடுகின்றன.

இந்தப் பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தே அங்கே மேற்கொண்டு நாம் கடமையாற்றலாமா இல்லையா என்பது முடிவாகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More