இளம் தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எல்லா தாய்மார்களுக்கும் எழும்.
நாம் எதாவது தவறு செய்தால் குழந்தையை பெரிதாக பாதிக்குமோ என்ற பயம் ஏற்படும்.
எனவே தாய்மார்கள் பயத்தை தவிர்க்க வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்களின் அறிவுரையை கேட்பது நல்லது.
அப்படி பெரியவர்கள் இல்லை என்றாலும் கவலை வேண்டாம். இந்ததொகுப்பே உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கும்.
மேலும் தாய்மார்கள் செய்யும் இயல்பான தவறுகளை பற்றி தெரிந்துகொண்டால், அதை நீங்கள் செய்யாமல் தவிர்க்கலாம்.
குழந்தையின் டயப்பரை அடிக்கடி மாற்றவேண்டும்.
அப்படி மாற்றாமல் இருந்தால் ஈரம் பரவி குழந்தைகள் அழத்தொடங்கும்.
பொதுவாக குழந்தையை டயப்பருக்கு பழக்கப்படுவதைவிட துணிக்கு பழக்கப்படுத்துவது நல்லது.
டயப்பரில் இருக்கும் வேதிப்பொருட்கள் குழந்தையின் சருமத்தை பாதிக்கலாம்.
குழந்தையை வாரத்திற்கு இரண்டு அல்லது ஒரு முறை குளிக்க வைத்தால் போதுமானது.
அடிக்கடி குளிக்க வைப்பதை தவிர்ப்பது நல்லது.
தினமும் குளிக்க வைத்தால் குழந்தையின் சருமம் வரண்டு விடும்.
பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை தொடுவது தாய்மார்களுக்கு பயத்தை ஏற்படுத்தலாம்.
பஞ்சு அல்லது சுத்தமான துணியை வைத்து தொப்புள் கொடியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
மேலும் டயப்பரை வைத்தோ வேறு துணியை வைத்தோ தொப்புள் கொடியை மூடக்கூடாது.
வெளிக்காற்று படவே குழந்தையின் தொப்புள் கொடியை விட்டு விட வேண்டும். 2 அல்லது 3 வாரங்களுக்குள் தொப்புள்கொடி காய்ந்து விழுந்துவிடும்.
ஒருவேளை தொப்புள் கொடியின் சருமம் சிவப்பாகவும், வீங்கியும் இருந்தால் மருத்துவரிடம் செல்லவேண்டும்.
இதுபற்றி பெரிதாக பயப்பட வேண்டியதில்லை.
பிறந்த குழந்தைகளை வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைக்க வேண்டும் .
அதிக சூடான நீரிலோ அல்லது குளிர்ந்த நீரிலோ குளிக்க வைக்கக்கூடாது.
அதேபோல் 2 அல்லது 3 இஞ்ச்உயரம் கொண்டடப்பில்’தான் குழந்தையை குளிக்க வைக்க வேண்டும்.
அதிக நேரம் குழந்தையை குளிக்க வைக்கக்கூடாது.
குளித்த பின் சுத்தமான, மிருதுவான துண்டால் குழந்தையின் உடலை துடைக்க வேண்டும்.
குழந்தையின் உச்சந்தலையில் வரி வரியாக தோல் இருப்பதுஇயல்பான விஷயம்தான்.
இது மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
குழந்தைக்கு எண்ணெய் தேய்க்கும்போது உச்சந்தலையை மெதுவாக தேய்தால் இந்த சருமம் உதிர்ந்துவிடும்.
குழந்தையின் சருமம் மிகவும் மிருதுவானது.
எனவே ரசாயனம் கலந்த சோப்பு , ஷாம்புவை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஈரப்பதம்அதிகம் நிறைந்த , கெமிக்கல் கம்மியாக இருக்கும் பேபி சோப்பை பயன்படுத்தினாலே போதுமானது.
குழந்தையின் வாயை ஒரு நாளைக்கு இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும்.
தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் கொடுத்த பின்பு இதைசெய்வது நல்லது.
சுத்தமான வெள்ளை துணியால் குழந்தையின் வாய் மற்றும் பல் ஈறை சுத்தம் செய்ய வேண்டும்.
பிறந்த குழந்தையின் நகம் வேகமாக வளர்ந்துவிடும்.
அதனால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறையாவதுநகம் வெட்ட வேண்டும்.
குழந்தை தூங்கும்போது மெதுவாக நகத்தை வெட்டுவது நல்லது.
குழந்தையின் காதுகளின் வெளிப்பக்கத்தில் மட்டும் சுத்தம் செய்ய வேண்டும்.
முக்கியமாக காதிற்குள் எதையும் நுழைத்து சுத்தம் செய்யக் கூடாது.
காதில் இருக்கும் ’வாக்ஸ்’ குழந்தையின் காதுக்குள் எதையும் செல்ல விடாது.
குழந்தையை குளிக்க வைப்பதற்கு முன் மசாஜ் செய்வது நல்லது மசாஜ் செய்வதால் சருமம் மிருதுவாகும்.
மேலும் குழந்தைகள் நன்றாக உறங்குவார்கள் .
பசியை அதிகரிக்கும்.
நன்றி:ஆரோக்கியமான வாழ்வு