Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இத்தாலி பிரதமர் ராஜினாமா | பொது வாக்கெடுப்பில் தோல்வி இத்தாலி பிரதமர் ராஜினாமா | பொது வாக்கெடுப்பில் தோல்வி

இத்தாலி பிரதமர் ராஜினாமா | பொது வாக்கெடுப்பில் தோல்வி இத்தாலி பிரதமர் ராஜினாமா | பொது வாக்கெடுப்பில் தோல்வி

1 minutes read

இத்தாலி நாட்டில் ஆட்சி இயந்திரத்தின் தலைவரான பிரதமரை தங்களது ஓட்டுரிமையின் மூலம் நீக்கம் செய்யும் அதிகாரம் பாராளுமன்ற மேல்சபை மற்றும் கீழவை உறுப்பினர்களுக்கு அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டம் உறுதிப்படுத்தியுள்ளது.
5ஆண்டுகள் ஆட்சிக்காலத்தை நிறைவு செய்யாமல், இவ்வாறு அவ்வப்போது ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டதால் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இத்தாலியில் 63 முறை ஆட்சிக் கவிழ்ப்புகளும், புதிய அரசுகள் தேர்வும் நடைபெற்றுள்ளது. இதனால், ஸ்திரமான ஒரு அரசு அமையாமல் போனதுடன், முந்தைய ஆட்சியாளர்கள் கொண்டுவந்த திட்டங்களும், கொள்கையளவிலான சில பொது சீர்திருத்தங்களும் நடைமுறைப்படுத்தப்படாமல், பாதியிலேயே முடங்கிப் போயின.
இதன்விளைவாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மந்தநிலையை சந்தித்து வருவதுடன், வேலையில்லா திண்டாட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.இதனையடுத்து, அரசியலமைப்பு திருத்த சட்டம் தொடர்பாக வரும் 4-ம் தேதி பொதுவாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில் அரசியல் அமைப்பு மேம்பாட்டுக்கு ஆதரவாக எந்த வாக்கும் பதிவாகவில்லை
இந்த பொது வாக்கெடுப்பில் பிரதமர் மட்டியோ ரென்சியின் திட்டம் தோல்வியை தழுவியது. இதுதொடர்பான முடிவுகள் வெளியானதும், தனது பதவியை ராஜினாமா செய்வதாக ரென்சி அறிவித்துள்ளார். இத்தாலி அதிபரை இன்று சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கப் போவதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More