Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சரணடைந்த அனைத்துப் புலிகளையும் விடுவித்துவிட்டோம்: கோத்தபாய

சரணடைந்த அனைத்துப் புலிகளையும் விடுவித்துவிட்டோம்: கோத்தபாய

1 minutes read

இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் போரின்போது சரணடைந்த 13,784 பேரை, புனர்வாழ்வளித்து விடுதலை செய்துவிட்டோம் எனவும் எவரையும் தடுப்புக்காவலில் வைக்கவில்லை எனவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேவேளை இராணுவத்தினர் 4,000 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் போரின்போது காணாமல் போனவர்கள் என கருதப்படுவோர் குறித்து விசாரணைகளை நடத்தியுள்ளோம் என்றும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அண்மையில் இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர் ஒருவருக்கு பதிலளித்த இராணுவத் தரப்பு, விடுதலைப் புலிகள் யாரும் இராணுவத்திடம் சரணடையவில்லையெனவும் அரசாங்கத்திடமே சரணடைந்தனர் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More