Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை; மத்திய அரசு உறுதியளிப்பு

இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை; மத்திய அரசு உறுதியளிப்பு

1 minutes read

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என மத்திய உட்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்கு மத்திய அரசை வலியுறுத்தியிருந்தார்.

இது தொடர்பாக உட்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துக் கலந்துரையாடிய போது அவர் இவ்வாறு உறுதியளித்ததாக அ.தி.மு.க.வின் உத்தியோக்கப்பூர்வ நாளேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்ற நிலையில், இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாதது துரதிஷ்டவசமானது என பலர் விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More