லிபிய தலைநகர் திரிபோலியிலுள்ள கிழக்கு லிபியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜெனரல் காலிபா ஹப்தார் தலைமையிலான கிளர்ச்சிக்குழுக்கு சொந்தமான பாடசாலையை இலக்கு வைத்து விமானத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். லிபியாவிலுள்ள ஐ.நா. ஆதரவு அரசாங்கம் குறித்த கிளர்ச்சிக்குழுவுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இந்நிலையில் பாடசாலையை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு தரப்பம் உரிமை கோரவில்லை. எனினும் அரச படையினர் தாக்குதலை நடத்தியிருக்கலாமென லிபிய தகவல்கள் தெரிவிக்கின்றன.