Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பொது இடங்களில் ஒரு மீற்றர் இடைவெளிவிட்டு நிற்காதோருக்கு S$10,000 ( சுமார் 13 லட்சம் ரூபா ) அபராதம்!

பொது இடங்களில் ஒரு மீற்றர் இடைவெளிவிட்டு நிற்காதோருக்கு S$10,000 ( சுமார் 13 லட்சம் ரூபா ) அபராதம்!

1 minutes read

சிங்கப்பூரில் பொது இடங்களில்ஒரு மீட்டர் தூரத்துக்கு மக்கள் பரஸ்பரம் ஒருவரிடமிருந்து ஒருவர் விலகி இருக்கவில்லையெனில், S$10,000 ( சுமார் 13 லட்சம் ரூபா ) அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு அதிரடியாக அறிவித்துள்ளது.

மலேசியா, சிங்கப்பூர் நாடுகளிலும் கொரோனா நோய் தொற்று வேகமாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மலேசியாவில் 26 பேர் கொரோனாவால் இதுவரை உயிரிழந்துள்ளனர் . 2,160க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

இதேபோல் சிங்கப்பூரிலும் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். 730க்கும் அதிமானோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இந்த நாடுகள் தீவிரமாக அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றன.

சிங்கப்பூரில் அலுவலகங்கள், பாடசாலைகளை தவிர பிற இடங்களில் 10 பேருக்கு அதிகமாக ஒன்று கூடக்கூடாது, பொது இடங்களில் அனைவரும் 1 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைத்து நிகழ்ச்சிகளிலும் இருக்கைகள் 1 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட வேண்டும்.

இத்தகைய பாதுகாப்பு இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு S$10,000 அபராதம் விதிக்கப்படும் அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் அல்லது இரு தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நடைமுறை இன்று முதல் சிங்கப்பூர் நாடு முழுவதும் அமுலுக்கு வந்துள்ளது.

வணக்கம் லண்டனுக்காக

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More