உலகளவில் கொரோனா வைரஸூக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளில் இத்தாலி தொடர்ந்து முதலாம் இடத்திலுள்ளது. இத்தாலியில் இதுவரை 19 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனாவுக்கு வைத்தியம் பார்த்து வந்த 100 வைத்தியர்கள், 30 தாதியர்கள் கொரோனா வைரஸால்
உயிரிழந்துள்ளனர்.
இதில், கடந்த மாதம் மீண்டும் வேலைக்கு சேர்ந்த ஓய்வு பெற்ற வைத்தியர்களும் அடங்குவர். இத்தாலியில் இதுவரை மொத்தமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 10% பேர் வைத்தியசாலையில் வேலை செய்தவர்களாகும்.
-வணக்கம் இலண்டனுக்காகஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-