கருகிய நிலையில் குப்பைக்குள் வீசப்பட்ட குழந்தையின் சடலம் தாய்லந்தில் நேற்று (20) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் குழந்தையின் சடலம் Nakhon Ratchasima பகுதியில் உள்ள சுற்றுலா தளத்துக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டதாகக் பொலிஸாரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
சுற்றுலா தளத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் ஒருவரே குழந்தையின் சடலத்தை முதலில் கண்டுள்ளார்.
இதனையடுத்து, குழந்தையின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதுடன், குழந்தையின் பின்னணி தெரியவில்லை என பொலிஸார் கூறினர்.
இதேவேளை, சுற்றுலா தளத்தில் கர்ப்பிணிகள் யாரும் தமது கண்ணில் படவில்லை என்றும் பணிப்பெண் கூறியுள்ளார்.
அத்துடன், மே 17ஆம் திகதி குப்பைகளைக் கொட்டும் இடத்திற்கு அருகில் வாகனம் ஒன்றைக் கண்டதாக மற்றொரு ஊழியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.