மொரோக்கோவுக்கு விடுமுறைக்காகச் சென்றிருந்த 2 சுற்றுப்பயணிகளை அல்ஜீரியாவின் கடலோரக் காவற்படை சுட்டுக்கொன்றதாக பிபிசி தெரிவித்துள்ளது.
பயணிகள் அதிவேக விசைப்படகில் அல்ஜீரியக் கடற்பகுதிக்குள் சென்றதால் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பிரெஞ்சு-மொரோக்கோ இரட்டைக் குடியுரிமை வைத்திருந்த 4 சுற்றுப்பயணிகள் இவ்வாறு அதிவேக விசைப்படகில் பயணம் செய்த நிலையில், அவர்களில் ஒருவரைக் கடலோரக் காவற்படை கைது செய்தது.
முகமது கிஸ்ஸி எனும் நபர் மட்டும் மொரோக்கோவுக்குத் திரும்பியுள்ளதாக பிபிசி தெரிவிக்கின்றது.
நால்வரும் திசைதெரியாமல் அதிவேக விசைப்படகில் அல்ஜீரியாவுக்குச் சென்றுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் தம்முடைய சகோதரன், மற்றொருவர் தம்முடைய நண்பன் என்று கிஸ்ஸி கூறியுள்ளார்.
இந்த நிலையில், மொரோக்கோ கடற்படை கிஸ்ஸியை நாட்டுக்குத் திருப்பி அழைத்துச்சென்றது.
அல்ஜீரியாவுக்கும் மொரோக்கோவுக்கும் இடையிலான எல்லை 1994ஆம் ஆண்டில் மூடப்பட்டதுடன், 2 ஆண்டுகளுக்கு முன்பு இருநாட்டுக்கும் இடையிலான உறவு துண்டிக்கப்பட்டது.