Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஜாவா லேன் – மொரகஸ்முல்லை கால் இறுதி இன்று

ஜாவா லேன் – மொரகஸ்முல்லை கால் இறுதி இன்று

1 minutes read

சிட்டி புட்போல் லீக்கினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான யூசுப் கிண்ண கால்பந்தாட்டத்தின் 3 ஆவது அரை இறுதிப் போட்டியில் ஜாவா லேன் கழகமும் மொரகஸ்முல்லை கழகமும் இன்று செவ்வாய்க்கிழமை (05) விளையாடவுள்ளன.

இப் போட்டி சிட்டி லீக் திடலில் பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இரண்டு தடவைகள் சம்பியனான ஜாவா லேன் தான் விளையாடிய றினோன் கழகத்துடனான பி குழு போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்டது.

இதனை அடுத்து பி குழுவுக்கான முதலாவது அணியைத் தீர்மானிக்கும் பொருட்டு அமுல்படுத்தப்பட்ட பெனல்டிகளில் 9 – 8 என ஜாவா லேன் வெற்றிபெற்று முதலிடத்தை உறுதி செய்துகொண்டது.

சி குழுவில் இடம்பெற்ற மொரகஸ்முல்லை தான் விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒன்றில் குறே கழகத்தை 2 – 1 என வெற்றிகொண்டிருந்தது. மற்றைய போட்டியில் விக்டரி கழகத்திடம் 0 – 1 என தோல்வி அடைந்திருந்தது.

இதற்கு அமைய இக் குழுவில் மொரகஸ்முல்லை இரண்டாம் இடத்தைப் பெற்று கால் இறுதியில் ஜாவா லேனை எதிர்த்தாட தகதிபெற்றது.

இந்த இரண்டு அணிகளில் ஜாவா லேன் கழகம் சற்று பலம் வாய்ந்ததாகத் தென்படுவதால் இன்றைய கால் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேறும் என கருதப்படுகிறது.

எனினும் மொரகஸ்முல்லை கழகம் இந்தப் போட்டியை இலகுவில் நழுவிடம் என எதிர்பார்க்க முடியாது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More