இலங்கையில் ஆசிய கிண்ணத்தை நடத்துவது குறித்து ஐ.பி.எல். தொடர் முடிந்தபிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளருமான ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு ஏற்ப, போட்டியை அங்கு நடத்துவது குறித்து மதிப்பீடு செய்து முடிவு எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆசிய கிண்ணம் எதிர்வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை இருபதுக்கு 20 போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் போட்டிகளை நடத்துவது குறித்து மீள் மதிப்பீடு செய்ய ஆசிய கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது.