பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்து 1.9 மில்லியன் பவுண்டுகள் நிதியுதவியைப் பெற்ற பின்னர், கொரோனா வைரஸ் தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளை ஆரம்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதேநேரம், பிரித்தானிய நிறுவனம் ஒன்றும், கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் முதல்கட்ட பரிசோதனை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனம், கொவிட்-19 தடுப்பூசி பரிசோதனைக்காக 18 முதல் 55 வயது வரை உள்ள 48 பேர் தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 40 இலட்சத்து 42 ஆயிரத்து 581 ஆக உயர்வடைந்துள்ளது.
8 இலட்சத்து 22 ஆயிரத்து 481 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு கோடியே 65 இலட்சத்து 90 ஆயிரத்து 668 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா நாடுகளில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுவதுடன், கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்று அதிகமாக இந்தியாவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.