சமாதான பேச்சுவார்த்தைக்கான நிபந்தனையாக ஆப்கானிய அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்ட பல தலிபான் கைதிகள் மீண்டும் ஆயுதங்களை கையில் ஏந்தியுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கட்டாரில் இடம்பெற்ற தலிபானுடனான கலந்துரையாடல்கள் நேர்மறையான ஒன்று என ஆப்கானிஸ்தானின் தேசிய நல்லிணக்கத்திற்கான உயர் சபையின் தலைவர் அப்துல்லா கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், பேச்சுவார்த்தைக்கான நிபந்தனையாக அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்ட 5,000 தலிபான் கைதிகளில் சிலர் காபூலுக்கு எதிரான போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளதாக அவர் கூறினார்.
துரதிர்ஷ்டவசமாக, இதுவரை, வன்முறையின் அளவு மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு அதிகமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை 2008 ஆம் ஆண்டின் பின்னர் எதிர்வரும் நாட்களில் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டு செல்லவுள்ளதாகவும் அப்துல்லா கூறினார்.