Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் கொரோனா பலி 20 இலட்சத்தைத் தாண்டும் | WHO எச்சரிக்கை!

கொரோனா பலி 20 இலட்சத்தைத் தாண்டும் | WHO எச்சரிக்கை!

1 minutes read
கொரோனா பலி 20 இலட்சத்தைத் தாண்டும் - WHO எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசி பரவலாக விநியோகிக்கப்படுவதற்கு முன்னா் உலகம் முழுவதும் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தைத் தாண்டலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, அந்த அமைப்பின் அவசரக் காலப் பிரிவுத் தலைவா் மைக்கேல் ரையான் கூறியதாவது: கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கொண்டு வருவதில் உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது.

அத்தகைய முயற்சியை மேற்கொள்ளாவிட்டால், கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியாவோரின் எண்ணிக்கை தற்போது உள்ளதைவிட தீவிரமாக அதிகரிக்கும். கொரோனா தடுப்பூசி அறிமுகமாவதற்கு முன்னா், அந்த நோயால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை தற்போது உள்ளதைவிட இரு மடங்காகக்கூடும். அந்த எண்ணிக்கை 20 இலட்சத்தைக் கடப்பதற்கான வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை. கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் பணிகள் மட்டுமன்றி, அந்த நோய்த்தொற்றின் பரவல் பாதையைக் கண்டறிதல், சம்பந்தப்பட்டவா்களை தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவதல் ஆகிய பாதுகாப்பு முறைகளை உலக நாடுகள் முழுமையாகப் பின்பற்ற வேண்டியதும் இன்றியமையாதது ஆகும் என்றாா் அவா்.

சனிக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் – பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் – போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் – போ் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். அந்த நாட்டில் மட்டும் – போ் அந்த நோய் காரணமாக உயிரிழந்துள்ளனா்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More