ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) 55 ஆவது ஆண்டு உச்சி மாநாட்டை எதிர்வரும் 2022 மே மாதம் கொழும்பில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி 2022 மே 02-05 ஆம் திகதிகள் வரை உத்தேச உச்சி மாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளும் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதேவேளை ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆண்டு உச்சிமாநாட்டை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஒரு திட்டத்தை வகுக்க நிதியமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்த தீர்மானத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உச்சி மாநாட்டில் சுமார் 3000- 4000 பங்கேற்பாளர்கள். உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட நிதி அமைச்சர்கள், மத்திய வங்கிகளின் ஆளுநர்கள், முக்கிய சர்வதேச வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இவற்றுள் அடங்குவர்.
முன்மொழியப்பட்ட உச்சிமாநாடு நான்கு நாட்களுக்குள் நடத்தப்படும், அதே நேரத்தில் நிகழ்வுக்கு இணையாக பொருந்தக்கூடிய பல மாநாடுகள் மற்றும் விழாக்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.