Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் முதல் சுற்று பேச்சுவார்த்தையில் கடும் கண்டனங்களை பறிமாறிக் கொண்ட அமெரிக்கவும் சீனாவும்

முதல் சுற்று பேச்சுவார்த்தையில் கடும் கண்டனங்களை பறிமாறிக் கொண்ட அமெரிக்கவும் சீனாவும்

2 minutes read

அலாஸ்காவில் நடைபெற்று வரும் பைடன் நிர்வாகத்திற்கும், ஜி ஜின்பிங் நிர்வாகத்திற்கும் இடையிலான முதல் சுற்று உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள் கடுமையான கண்டனங்களை பறிமாறிக் கொண்டனர்.

“சீனாவைத் தாக்க” நாடுகளை அமெரிக்கா தூண்டுவதாக சீன அதிகாரிகள் குற்றம் சாட்டினர், அதே நேரத்தில் சீனா “பெரும் நோக்கத்திற்காக வந்துவிட்டது” என்று அமெரிக்கா கூறியது.

இரண்டு வல்லரசுகளுக்கிடையிலான உறவுகள் அண்மைய ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்த நிலையில் உள்ளன.

சிஞ்சியாங்கில் உய்குர் முஸ்லிம்களை பீஜிங் நடத்துவது போன்ற சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை எழுப்ப அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

அலாஸ்காவின், ஏங்கரேஜில் நடந்த இந்த மோசமான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் அந்தோனி பிளிங்கன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதேபோல் சீனாவின் மிக சிரேஷ்ட வெளியுறவுக் கொள்கை அதிகாரி யாங் ஜீச்சி மற்றும் வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடரின் ஆரம்பத்திலேயே பிளிங்கன், 

ஜின்ஜியாங், ஹாங்காங், தைவான், அமெரிக்கா மீதான சைபர் தாக்குதல்கள், எங்கள் நட்பு நாடுகளின் பொருளாதார வற்புறுத்தல் உள்ளிட்ட சீனாவின் நடவடிக்கைகளுடன் அமெரிக்கா எங்கள் ஆழ்ந்த கவலைகளைப் பற்றி விவாதிக்கும்.

இந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மையை பராமரிக்கும் விதிகள் சார்ந்த ஒழுங்கை அச்சுறுத்துகின்றன என்று அவர் கூறினார்.

அதற்கு பதிலளித்த யாங், 

வொஷிங்டன் தனது இராணுவ வலிமையையும் நிதி மேலாதிக்கத்தையும் மற்ற நாடுகளை அடக்குவதற்கு பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.

இது சாதாரண பாதுகாப்பு பரிமாற்றங்களைத் தடுக்க தேசிய பாதுகாப்பு என்ற கருத்துக்களை துஷ்பிரயோகம் செய்கிறது, மேலும் சில நாடுகளை சீனாவைத் தாக்க தூண்டுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

அமெரிக்காவில் மனித உரிமைகள் மிகக் குறைந்த நிலையில் உள்ளன, கறுப்பின அமெரிக்கர்கள் “படுகொலை செய்யப்படுகிறார்கள்” என்றும் யாங் கூறினார்.

இதன்போது அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், வொஷிங்டன் சீனாவுடன் மோதலைத் தேடவில்லை, நாங்கள் எப்போதும் எங்கள் மக்களுக்காகவும், எங்கள் நண்பர்களுக்காகவும் எங்கள் கொள்கைகளுக்காக எழுந்து நிற்போம் என்று கூறினார்.

சர்வதேச ஊடகங்களின் முன்னிலையில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்தது.

இந் நிலையில் இவர்களுக்கிடையிலான இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு (0330 GMT) தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More