மலேசிய- தாய்லாந்து எல்லையில் கடத்தல் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட நான்கு பெண்கள் உள்பட 68 பேரை மலேசிய பொது நடவடிக்கைகள் படையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 17ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட Operation Benteng எனும் தேடுதல் நடவடிக்கைகளின் கீழ் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் மலேசியா மற்றும் தாய்லாந்தை நாட்டைச் சேர்ந்தவர்கள் என கட்டளை அதிகாரி அசிசன் யூசப் தெரிவித்திருக்கிறார்.
“கடத்தல் செயல்களில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட 52 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.” இந்த ஒரு மாத நடவடிக்கைகளின் மூலம் சுமார் 6 கோடி இந்திய ரூபாய் செய்யப்பட்டுள்ளன(35 லட்சம் மலேசிய ரிங்கட்டுகள்) மதிப்பிலான பொருட்களும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான கடத்தல்காரர்கள் தாய்லாந்தின் எல்லையோர பகுதிகளான Pasir Mas, Rantau Panjang, Tanah Merah, Tumpat ஆகிய மலேசிய பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக கட்டளை அதிகாரி அசிசன் யூசப் கூறியிருக்கிறார்.
—