ஆப்கானிஸ்தானுடனான வானா பஜார் மற்றும் அங்கூர் அடா எல்லைக் கடக்கும் பகுதியை மூடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கலைப்பதற்காக பொலிசார் மற்றும் எல்லைப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
வானா நகரில் உள்ள சாரணர் முகாம் முன்பு ஏராளமான வியாபாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் திரண்டு பாதையை திறக்கக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது போராட்டக்காரர்களை கலைக்க பொலிசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் போராட்டத்தை நிறுத்தாது தொடர்ந்தனர். இதன் பின்னர் உள்ளூர் பெரியவர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு சந்தைப் பகுதி திறக்கப்பட்டது. இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.