சீனா தலைமையின் முக்கிய வருடாந்த கூட்டம் வரும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் இரண்டு மாதங்கள் இடம்பெறுவதால் சீனத் துறைமுக நகரான பெய்டெய்ஹேவுக்கு டெஸ்லா கார்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெய்டெய்ஹே போக்குவரத்துப் பொலிஸ் படையணி இதனை உறுதி செய்ததோடு இதுபற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தது.
டெஸ்லா காரில் பொருத்தப்பட்டிருக்கும் கெமராக்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை அதிகரித்திருப்பதாக அச்சம் நிலவுவதற்கு மத்தியிலேயே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.