Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் அரசாங்கத்தை விமர்சித்த பிபிசி தொகுப்பாளர் பணி இடைநீக்கம்

அரசாங்கத்தை விமர்சித்த பிபிசி தொகுப்பாளர் பணி இடைநீக்கம்

1 minutes read

இங்கிலாந்து நாட்டின் பிபிசி செய்தி நிறுவனத்தின் விளையாட்டு பிரிவு தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியான ‘மேட்ச் ஆப் தி டே’ என்ற கால்பந்து போட்டி தொடர்பான வார இறுதி நிகழ்ச்சியை ஹெரி லிங்கர் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில், இங்கிலாந்து அரசாங்கத்தின் புதிய அகதிகள் கொள்கை குறித்து ஹெரி லிங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்து, இங்கிலாந்து அரசை அவர் விமர்சித்திருந்தார்.

இதனை தொடர்ந்து தொகுப்பாளர் பணியில் இருந்து ஹெரி லிங்கரை பிபிசி செய்தி நிறுவனம் தற்காலிகமாக நீக்கியது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அத்துடன், இதற்கு கண்டனக் குரல்கள் எழுந்ததுடன், பிபிசியில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் ‘மேட்ச் ஆப் தி டே’ நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என்று விளையாட்டு வீரர்களும் தெரிவித்தனர்.

இதையடுத்து, ‘மேட்ச் ஆப் தி டே’ நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நேரம் குறைக்கப்பட்டது. மேலும், பழைய வீடியோக்களை மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த விவகாரம் இங்கிலாந்து செய்தித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More