பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், சீனாவுக்கு இன்று (06) திடீர் விஜயம் மேற்கொண்டார்.
சீனாவில் அவருக்கு விசேட அரச மரியாதை வழங்கப்பட்டது.
இதன்போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், உக்ரைனில் ரஷ்யாவின் போரை நிறுத்துவதற்கு தனது செல்வாக்கைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
பல ஆண்டுகளாக மேற்கு நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில், இந்த விஜயம் மிகவும் விசேடமாக கவனிக்கப்பட்டு வருகிறது.
உக்ரைன் – ரஷியா போரால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஓரணியாக உள்ளன. ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சீனா எடுத்து வருகிறது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, ஜெர்மன் அரசும் ரஷியாவிடம் இருந்து சீனா விலகி இருக்கும் என நாங்கள் நம்புகிறோம் எனக் கூறியதுடன், இல்லையெனில் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையிலேயே, சீனாவுக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி திடீர் பயணம் மேற்கொண்டு உள்ளார்.