உலகின் முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குகின்ற ஆல்ப்ஸ் மலைத்தொடர் பகுதியில் இன்று திடீர் பனிச்சரிவில் சிக்கிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஐரோப்பியாவில் உள்ள நீண்ட மலைத்தொடர் ஆல்ப்ஸ் மலைத்தொடர் ஆகும் இந்த மலைத்தொடருக்கு ஈஸ்ட்டர் காலங்களில் சுற்றுலா பயணிகள் விரைவதுண்டு இந்தநிலையில் ஆல்ப்ஸ் மழைத் தொடரில் ஏற்பட்ட பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது எனவும் 4 பேர் மரணமடைந்துள்ளார் என்றும் பிரான்ஸ் நாட்டு உள்துறை அமைச்சர் ஜெரால்ட்டு தர்மனின் தெரிவித்துள்ளார்.
இந்த பனிச்சரிவுக்கு காரணம் சாமோனிக்ஸ்க்கு தென்மேற்கு சுமார் 30km (20மைல்) தொலைவில் உள்ள அர்மான்ட் பனிப்பாறை ஒன்று உருண்டு விழுந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.
மேலும் தேடுதலுக்காக இரண்டு ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.