உக்ரைனுக்கான ஆதரவை கைவிட்டு, “நாங்கள் வெளியேற மாட்டோம்” என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு எதிரான வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் எதிர்ப்பை ஆதரிப்பதில் மேற்கத்திய நட்பு நாடுகள் “உறுதியானவை” என்பதை ரஷ்ய ஜனாதிபதி புரிந்துகொள்ள வேண்டும் என்று வெள்ளிக்கிழமை பிரதமர் கூறினார்.
ஜப்பானில் ஜி7 உச்சிமாநாடு தொடங்குவதற்கு சற்று முன்பு ஹிரோஷிமாவின் சீஃபுகான் தேநீர் இல்லத்தில் இடம்பெற்ற நேர்காணலின் போது சுனக், ஸ்கை நியூஸிடம் “புடினுக்கு எனது செய்தி நேரடியானது” என கூறினார்.
இந்த நிலையில், ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ரஷ்ய வைரங்களை பிரிட்டன் தடை செய்கிறது. இது ரஷ்ய செம்பு, அலுமினியம் மற்றும் நிக்கல் இறக்குமதியையும் தடை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.