அமெரிக்காவின் மெரிலேண்ட் மாகாணத்தின் பால்டிமோர் நகரில் கிரெட்னா அவன்யூ பகுதியில் நேற்று நடைபெற்ற கேளிக்கை நிகழ்ச்சி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் நால்வர் மரணித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 100க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர்.
கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் புகுந்த நபர், அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
எனினும், தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில் அவரை தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.