Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா கனடா பிரதமரின் பாதுகாப்பு குழு அதிகாரி பதவி விலகல்

கனடா பிரதமரின் பாதுகாப்பு குழு அதிகாரி பதவி விலகல்

1 minutes read

கனடாவில் வசித்து வந்த சீக்கிய குருத்வாராவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர்.

அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சமீபத்தில் எதிரொலித்து. இதனால் இந்தியா மற்றும் கனடாவுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

நிஜ்ஜாருக்கு பயங்கரவாத நடவடிக்கைகளில் உள்ள தொடர்பு பற்றி, இந்தியா பல ஆண்டுகளாக கனடாவை தொடர்புகொண்டு அதுபற்றிய விவரங்களை பகிர்ந்து வந்துள்ளது.

2018ஆம் ஆண்டு ட்ரூடோவுக்கு, இந்தியா அனுப்பிய தேடப்படும் நபர்களின் பட்டியலில் நிஜ்ஜார் பெயர் இடம்பெற்றது.

இதன்பின் 2022ஆம் ஆண்டு, பஞ்சாப்பில் பயங்கரவாத பரவலுடன் தொடர்புடைய வழக்குகளில் அவரை நாடு கடத்தி ஒப்படைக்கும்படி பஞ்சாப் பொலிஸார் கேட்டுக் கொண்டனர்.

இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகளுக்கு பின்னர், 2020ஆம் ஆண்டு அவரை பயங்கரவாதியாக இந்தியா அறிவித்தது.

இந்தச் சூழலில் நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் இந்தியாவின் மீது கனடா பிரதமர் ட்ரூடோ குற்றச்சாட்டு கூறியமை சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் இந்தியா – கனடா இடையேயான மோதல் போக்கினால் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், கனடா பிரதமரின் தனி பாதுகாப்புக் குழு அதிகாரி ஒருவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது சத்தியப் பிரமாணத்தை மீறி சட்டவிரோத பணிகளைச் செய்ய விரும்பவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கார்போரல் புல்போர்ட் என்ற இந்த அதிகாரி, நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இது நிச்சயமாக திட்டமிட்டு எடுத்த முடிவு அல்ல என்று கூறியுள்ளார்.

பாதுகாப்புப் குழு அதிகாரியின் கடமைகள் என்னென்ன என்பது குறித்து சட்டங்களைப்பற்றி ஆராய்ந்த பின்பு இந்த முடிவுக்கு வந்திருப்பதாகவும் புல்போர்ட் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More