தென் சீனக் கடலில் சீனக் கப்பலும் பிலிப்பைன்ஸ் கப்பலும் நேற்று (22) மோதிக் கொண்டன.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு கடுமையாகி வருகிறது.
தாம் சொல்லச் சொல்லக் கேட்காமல் பிலிப்பைன்ஸ் கப்பல் எல்லையை மீறி வந்ததாகச் சீனா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இரு நாட்டுக் கப்பல்களும் மோதிக் கொண்ட இச்சம்பவத்தால் பிலிப்பைன்ஸ் கடும் கோபம் அடைந்துள்ளது.
சீனக் கப்பல் வேண்டுமென்றே மோதியதாகப் பிலிப்பைன்ஸ் தற்போது குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்துடன், சீனா தொடர்ந்து அத்துமீறி நடந்தால் விளைவு மோசமாக இருக்கும் என்றும் பிலிப்பைன்ஸ் எச்சரித்துள்ளது.
தென் சீனக் கடலின் சில பகுதிகளை பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேசியா, புருணை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன.
ஆனால், கிட்டத்தட்டத் தென் சீனக் கடல் முழுதும் தனக்கே சொந்தம் என்கிறது சீனா.