Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா காட்டுத்தீ காரணமாக உலகின் வெப்பமான இடமாக சிட்னி அறிவிக்கப்பட்டுள்ளது!

காட்டுத்தீ காரணமாக உலகின் வெப்பமான இடமாக சிட்னி அறிவிக்கப்பட்டுள்ளது!

1 minutes read

அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் பலி எண்ணிக்கை 26 என அதிகரித்துள்ளது.

சிட்னி நகரம் பூமியின் வெப்பமான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்னியின் புறநகர்ப் பகுதியான பென்ரித்தில் வெப்பநிலை 48.9C ஐ எட்டியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய நகரத்தில் இதுவரை பதிவானதில் மிக அதிகமென கூறப்படுகிறது. காட்டுத் தீயால் எழுந்துள்ள புகையால் முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

காட்டுத்தீயை கட்டுப்படுத்த 3000 துணை ராணுவப் படையை உதவிக்கு அழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸின் தென் கடற்கரை மற்றும் விக்டோரியாவில் உள்ள கிழக்கு கிப்ஸ்லேண்டில் உள்ள தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தீ வேகமாக பரவி வருகிறது.

இங்கு வெப்ப நிலை சனிக்கிழமை பிற்பகல் 44 டிகிரி செல்சியஸ் ஐ எட்டியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More