கிழக்கு லண்டன், Hornchurchஇல் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் 18 வயது இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நியூ சிட்டி கல்லூரியில் இருந்து சில தொலைவிலுள்ள டெஸ்கோ எக்ஸ்பிரஸ் வெளியே வைத்து இன்று காலை 10.30 மணியளவில் அந்த இளைஞர் கத்திக்குத்துக்கு உள்ளாகியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த இளைஞன், உயிருக்கு போராடிய நிலையில் Hornchurch மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தையடுத்து நியூ சிட்டி கல்லூரி உடனடியாக மூடப்பட்டதுடன், பொலிஸாரின் அறிவித்தல் இன்றி மாணவர்கள் அங்கிருந்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டது.
அண்மையில் Hornchurchஇல் இடம்பெற்ற இரண்டாவது சம்பவமாக இது பதிவாகியுள்ளது.
கடந்த 04 நாட்களுக்கு முன்னரும் 19 வயது இளைஞன் ஒருவரும் கத்திக்குத்துக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.