6
யுத்தங்கள் முடிந்து பல ஆண்டுகள் கழிந்தாலும் விடுதலை புலிகளின் பொருட்கள் நினைவு ஊட்டிய வண்ணம் இருக்கிறது. இதில் ஒரு நினைவு தான் இன்று சாவகச்சேரி டச்சுவீதி மருதடிப் பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகளும் C4 வெடிமருந்தும் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று(12-03-2018) மாலை இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரிப் பகுதியில் குடிநீர் குழாய் பொருத்துவதற்கான பணிகள் இடம் பெற்ற போது, குழாய் பொருத்துவதற்காக நிலம் அகழப்பட்டது.
இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய புலிச் சீருடை ஒன்றும், சீ4 (C4) வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் சாவகசேரிப் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரிப் பொலிசார் அவற்றினை மீட்டு சென்றுள்ளனர்.