0
தேர்தல் முறைமை தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் நோக்கில் எதிர்வரும் வியாழக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்புக்கு முன்னதாக சிறுப்பான்மை இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று மாலை 3 மணிக்கு தேசிய நல்லிணக்க, சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சில் நடைபெறவுள்ளது.