Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவு நாள் வெல்லாவெளியில்!

முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவு நாள் வெல்லாவெளியில்!

2 minutes read

 

முதல் பெண் மாவீரர் மாலதியின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று : ஜனநாயக போராளிகள் கட்சியினரினால் மிக உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு

1987.10.10 ஆம் ஆண்டு ஈழ வரலாற்றில் எவராலும் மறக்கமுடியாத ஒரு நாள் பெண் விடுதலைக்காக தேசத்தின் விடுதலைக்காகவும் தனது உயிரை தியாகம் செய்த முதல் பெண் போராளி மாலதி. இந்திய இராணுவத்திற்கு எதிரான படை நடவடிக்கையின் போது கோப்பாய் கிறேசரடி பகுதியில் வைத்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் அவரது 31 ம் ஆண்டு நினைவு தினம் இன்று 10 திகதி ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் அதன் மட்டு அம்பாறை இணைப்பாளர் என். நகுலேஸ் தலைமையில் வெல்லாவெளியில் அமைந்துள்ள மாவட்ட காரியாலயத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது போரதீவுப்பற்று தவிசாளர் யோகேஸ்வரன் ரஜனி கட்சியின் மட்டு அம்பாறை ஊடக பேச்சாளர் பீ. கோனேஸ் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது நிகழ்வு கடந்த கால ஈழ வரலாற்றின் போது உயிர்தீர்த்த உறவுகளுக்காகவும் மாவீரர்களுக்காகவும் ஒரு நிமிட மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டதுடன் அதன் பின்னர் மாலதியின் திருவுருவ படத்திற்கு அகலவிளக்கேற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஈழ போராட்டத்தின் முதலாவது பெண் போராளியிக உயிர் தீர்த்த மாலதியின் நினைவின் பேரில் மாலதி படையணி எனவும் அவரது போராட்ட வீரத்திற்காக 02 ஆம் லெப்டினல் மாலதி எனவும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டார்.

வணக்கம் லண்டனுக்காக அம்பாறை மாவட்ட செய்தியாளர் டினேஸ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More