Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரசாங்கம் இரகசியங்களை தெரு நாடகமாக்கியுள்ளது!

அரசாங்கம் இரகசியங்களை தெரு நாடகமாக்கியுள்ளது!

1 minutes read

அரசாங்கம் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான இரகசியங்களை தெரு நாடகமாக்கி ஊடகங்களிலே காட்டிக் கொண்டுத்து வருகின்றது.

தேசிய பாதுகாப்பினை அரசியலாக்கி அதனை நாசப்படுத்தி விட்டால் ஒரு முதலீட்டாளராவது இந்த நாட்டின் பக்கம் தலைவைத்துப் படுக்கமாட்டார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் இதுவரையில் எத்தனையோ பாரதூரமான ஊழல், மோசடிகள் இடம்பெற்றுள்ளன.பொது மக்களது பணம் பட்டப்பகலிலே கொள்ளையிடப்பட்டுள்ள சந்தர்ப்பங்கள் ஏராளமாக ஏற்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்பினை அரசியலாக்கி அதனை நாசப்படுத்திவிடாதீர்கள் என்றே கேட்டுக் கொள்கின்றேன்.

ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பின் பலம், இரகசியத் தன்மை,மதிப்பு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது பற்றி நாட்டு நலன்களில் அக்கறையுள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

இந்த நாட்டில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி – எம்.ஆர்.எம்.வஸீம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More