Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் காடழிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் காடழிப்பு!

4 minutes read

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் காடழிப்பு தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த விடயம் தொடர்பில் அரச அதிகாரிகள் கண்டுகொள்ளாது செயற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் மாங்குளம் பனிக்கங்குளம் ஆகிய பிரதேசத்திற்கு இடைப்பட்ட பகுதியில் இவ்வாறு அண்மை நாட்களாக காடு அழிக்கப்பட்டு வருகின்றது.

இவ்விடயம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்ற புாதிலும் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் தற்புாது காணப்படும் கடும் உஷ்ணம், மழை வீழ்ச்சி இன்மையால் ஏற்பட்டுள்ள வரட்சியான நிலை காணப்படும் நிலையில் இவ்வாறு கட்டுப்பாடின்றி காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் சுற்று சூழலில் அக்கறை கொண்டவர்களும் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் அரச திணைக்களம் ஒன்றைஅமைப்பதற்காக இவ்வாறு காட்டின் பெரும் பகுதி அழிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வன்னி நிலப்பரப்பில் அரச காணிகள் அதிகளவில் காணப்படும் நிலையில் இவ்வாறு பாரிய காட்டை அழித்துதான் அரச திணைக்களம் ஒன்றை அமைக்க வேண்டுமா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இவ்வாறு காடழிப்பதற்கு வன இலாகா திணைக்களமும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகமும் அனுமதி அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக சுற்று சூழல் அமைச்சின் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே, இவ்வாறு பொறுப்பற்ற வகையில் காடழிப்பில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவு்ம, இதற்கு துணைபுாகும் அரச அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் சுற்று சூழலை பாதுகாப்பதற்காக அண்மையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மரநடுகை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அண்மை நாட்களாக குறிப்பாக இன்றைய தினமும் இவ்வாறு காடழிப்பு இடம்பெற்று வருகின்றது.

இச்சம்பவத்திற்கு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் முழுமையாக பொறுப்புற்க வேண்டும் எனவு்ம, அதனை கட்டுப்படுத்த தவறியமைக்கான அவர்மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் கடுமையாக குற்றம் சாட்டுகின்றனர்.

தமது பிரதேசத்தின் வழங்களை அழிக்கும் அதிகாரிகள் மீது ஜனாதிபதி செயலகம் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவரகள் கோரிக்கை விடுக்கின்றனர்.  

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More