சமையல் எரிவாயு பற்றாக்குறை காணப்படுவதைதொடர்ந்து சமையல் எரிவாயுவை மறைத்து வைத்திருப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.
அத்துடன் சமையல் எரி வாயுவை கூடுதலான விலைக்கு விற்பனை செய்கின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அது தொடர்பாக விற்பனையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளுக்காக 500 அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் போதுமான காஸ் சிலின்டர்கள் தற்சமயம் நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்ட்டுள்ளன.
இவ்வாறிருக்கையில் சில இடங்களில்இன்றும் சமையல் எரிவாயுவை வாங்குவதற்கு பலர் வரிசையில் நின்றதுடன்,சமையல் எரி வாயுவுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையையும் காணக்கூடியதாய் உள்ளது.