ஜனாதிபதி ஆணைக்குழுவினால் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.
ஆணைக்குழுவின் செயலாளர் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 305 பேரிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவ் வாக்குமூலத்தை கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, பேராசிரியர் ரொஹான் குணரத்ன மற்றும் பிரதி பொலிமோ அதிபர்கள் உள்ளிட்ட பலர் ஆணைக்குழுவில் அ ளித்துள்ளனர்.
கடந்த 19 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை, கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.