Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சப்பாத்து வர்த்தகர் சட்ட விரோத சிகரெட் கடத்தலில் சிக்கி விளக்கமறியல் .

சப்பாத்து வர்த்தகர் சட்ட விரோத சிகரெட் கடத்தலில் சிக்கி விளக்கமறியல் .

1 minutes read

இலங்கை அரசு தடை செய்த சிகரட்டுகளுடன் சிலாபம் சிங்கபுரம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பொலிஸாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செயப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டார் .

59 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சப்பாத்து வர்த்தகரான குறித்த சந்தேக நபர் தனது காரில் மிகவும் சூட்சுமுமான முறையில் சிகரட்டுகளை மறைத்து கொண்டு சென்ற  போதே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது வரி செலுத்தாமல் கொண்டுவரப்பட்ட 229 சிகரட்டு பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றிலிருந்து 45 ஆயிரத்து 800 சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் இன்று சனிக்கிழமை சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். இதன்போது நீதிவான் சந்தேக நபரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More