மொனராகலை பகுதியை சேர்ந்த 40 வயதுடையவர் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் இரு புத்தர் சிலைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர்கள் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 18 அங்குல உயரமும் 11.805 கிலோகிராம் எடையுடைய சிலை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதோடு 2 அங்குல உயரம் கொண்ட மற்றுமொரு சிலையும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிலைகள் தங்க நிறத்தில் காணப்படுவதாக தெரிவித்த காவல் துறையினர், சிலைக்கு தங்க ரசம் பூசப்பட்டுள்ளதா அல்லது சிலையே தங்கத்திலானதா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சிலையானது மொனராகலை பகுதியில் புதையல் அகழ்வில் கிடைக்கப்பெற்றதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.