கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.சுகாதார அமைச்சின் தரவுகளுக்கு அமைய, இன்றைய தினம் 4 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இரண்டு நோயாளர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வௌியேறியுள்ளனர்.
தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 229 பேர் தொடர்ந்தும் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா தொற்றுக்குள்ளான 05 பேர் நேற்று (23) பதிவாகினர்.இதனிடையே, கொழும்பு IDH வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.IDH வைத்தியசாலையில் பணியாற்றிய சமூக வைத்திய நிபுணர் ஒருவரே தொற்றுக்குள்ளாகியுள்ளார்.