மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு இன்று (07/05/2020) பிற்பகல் 2 மணியளவில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உடல் வெப்பநிலையை அளவிடும் 15 கருவிகளும் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனைக்கு 10 கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலுள்ள MOH மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு 15000 ரூபாய் பெறுமதியுடைய 25 Smart Infrared Thermometer கருவிகள் வழங்கப்பட்டன.