மட்டக்களப்பு மாவட்ட மக்களால் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்பட வாக்குகள் வீண் வாக்குகள். அவர்களால் நூற்றுக்கணக்கானவர்களின் வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் போய்யுள்ளது, பலரின் அடுப்பு எரியும் நிலமை இல்லாமல் போயுள்ளது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவிதுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலைக் கிராமத்தில் அவரது ஏறாவூர்பற்றுக்கான காரியாலயத் திறந்து விழா (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு காரியாலயத்தை திறந்து வைத்து கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ”எமது பிறப்பின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்றால் நமக்கு முன்னால் 400 போர் எழுந்துநின்று மாலைபோடுவதும், கைதட்டுவதுமல்ல எம்மால் 4 போர் வாழ்ந்தார்களா என்பதாகத்தான் இருக்க வேண்டும். எனவே எமக்கு மக்கள் தந்துள்ள ஆணையினால் 400 பேரல்ல 4000 இத்திற்கு மேற்பட்டவர்களை வாழ வைப்பதற்கான வேலைத்திட்டங்களை நாங்கள் தற்போது முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
கிழக்கு மாகாணத்தில் எமது மக்களின் அரசில் இருப்பை உறுத்திப்படுத்துவதற்காக மக்களின் நில, வளம், பொருளாதாரம், கல்வி, விளையாட்டு, போன்ற துறைகள் கட்டியெழுப்பப்படல் வேண்டும். சமத்துவத்துடன் ஏனைய சமூகங்களுக்கு நிகராக எமது சமூகம் தலை நிமிர்ந்து வாழவேண்டும். யாருக்கும் கைகட்டி, தலைகுநிந்து வாழக்கூடாது என்பதுதான் எமது அடிப்படை நோக்கமாகும்.
அதற்காகவேண்டி எமது மக்களுக்கு உரிமையுடன் சார்ந்த அரசியலைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். நானும் எதிர்க்கட்சியில் இருந்து செயற்பட்டவர் கடந்த நான்கரை வருடத்தில 20 பேருக்குக்கூட எங்களால் வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுக்க முடியவில்லை.
மட்டக்களப்பு மாவட்ட மக்களால் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்பட வாக்குகள் வீண் வாக்குகள். அவர்களால் நூற்றுக்கணக்கானவர்களின் வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் போய்யுள்ளது, பலரின் அடுப்பு எரியும் நிலமை இல்லாமல் போயுள்ளது. குறிப்பாக சாணக்கியன் எம்.பி வேலைவாய்ப்பு தொடர்பில் துள்ளிக் குதிக்கின்றார்.
உரிமை பேசி மக்களிடம் வாக்குக் கேட்டு வந்தவர்கள் உரிமையைப் பெற்றுக்கொடுக்கலாம். நாங்கள் அபிவிருத்தியைச் செய்கின்றோம் என்றால் ஏன் அவர்களால் உரிமையைப் பெற்றுக் கொடுக்கலாமே, அதனை அவர்களால் செய்ய முடியாது, எனவே அபிவிருத்தியும் செய்ய முடியாது, உரிமையையும் பெற்றுக் கொடுக்க முடியாது, நாங்கள் எதுவும் செய்யாமல், அனைத்தையும் குற்றம் சுமத்துகின்றவர்களாகவே இருந்து வருகின்றீர்கள்.
மற்றவரின் சட்டியில் என்ன வேகுது என்று பார்ப்பதைவிட உங்களுடைய சட்டியில் என்ன கருகுது என்று பாருங்கள் என நான் அவ்வாறானவர்களுக்கு ஆலோசனை கூறுகின்றேன். எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எங்கால் செய்யக்கூடிய வேலைகளை நாங்கள் செய்துகொண்டு போகின்றோம்.
மக்களின் பிரச்சனைகளை உண்மையாக நாடிபிடித்துப்பார்த்து அதனை யார் நிறைவு செய்து கொடுக்கின்றாரோ அவர்தான் மக்களால் தெரிவு செய்யப்படுவார். மாறாக மக்களின் பிரச்சனைகளை வைத்துக் கொண்டு பிளைப்புவாத அரசியல் செய்வாராக இருந்தால் அவர்களை அரசியலில் இருந்து மக்கள் காணாமலாக்கிவிடுவார்கள்.” என அவர் தெரிவித்துள்ளார்