0
இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணையகம் மற்றும் உயர் கல்வி அமைச்சகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணையகம் மற்றும் உயர் கல்வி அமைச்சகத்தில் நடத்தப்பட்ட 50 பி.சி.ஆர். பரிசோதனைகளில் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் இன்று காலை பாராளுமன்றில் உரையாற்றும்போது தெரிவித்தார்.