Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மூன்று உதவியாளர்களுடன் ‘கிம்புலா எலா குணா’ சென்னையில் கைது

மூன்று உதவியாளர்களுடன் ‘கிம்புலா எலா குணா’ சென்னையில் கைது

1 minutes read

தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாக கூறப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான ‘கிம்புலா எலா குணா’ என அழைக்கப்படும் சின்னையா குணசேகரன் இந்தியாவின் சென்னையில்‍ கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்திலிருந்து டில்லிக்கு புறப்படுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டபோது அவரும், அவரது மூன்று உதவியாளர்களும் ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்திற்கு தப்பிச் செல்வதற்கு முன்பு, குணா இலங்கையில் ஒரு பெரிய போதைப்பொருள் வியாபாரி ஆவார். 

1999 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவை கொலைசெய்வதற்கான தமிழீழ விடுதலை புலிகளின் தோல்வியுற்ற முயற்சியில் அவர் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.

அதன் பின்னர் அவர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து தமிழகத்துக்கு தப்பிச் சென்றார்.

எவ்வாறெனினும் ஞாயிற்றுக்கிழமை உளவுத்துறையின் தகவல் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட இவர்கள் தற்போது தடுப்புக் காகவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More