ஜெனீவா தீர்மானம் குறித்து அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் வணக்கம் லண்டனுக்கு தெரிவித்த கருத்து…
“இத்தீர்மானம் இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை ராஜதந்திர ரீதியாக ஒரு தோல்வி. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை குறிப்பாக நீதிக்கான அவர்களுடைய போராட்டத்தைப் பொறுத்தவரை இது ஒரு மகத்தான திருப்திகரமான வெற்றி அல்ல.
முன்னைய தீர்மானங்களின் தொடர்ச்சியாகவே புதிய தீர்மானமும் வந்திருக்கிறது. ஒப்பீட்டளவில் முன்நைய தீர்மானங்களை விடவும் சில விடயங்களில் இத்தீர்மானம் நீர்த்துப் போய் இருக்கிறது.
அதோடு கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி மூன்று கட்சிகளும் சிவில் சமூகங்களும் இணைந்து அனுப்பிய பொது ஆவணத்தில் கேட்கப்பட்ட முக்கியமான விடயத்தை இத்தீர்மானம் பொருட்படுத்தவே இல்லை.அதாவது பொறுப்புக்கூறலை ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்று அப்பொது கடிதம் கேட்கிறது. ஆனால் புதிய தீர்மானம் பொறுப்புக்கூறலை ஐநா மனித உரிமைகள் பேரவைக் உள்ளேயே தொடர்ந்தும் வைத்திருக்கிறது… என்று மேலும் அவர் தெரிவித்தார்.