0
அரச வெசாக் தினத்தை இம்முறை நிறுத்த தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்றுப் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இம்முறை அரச வெசாக் தினத்தை யாழ்ப்பாணம் நாகதீப ரஜமஹா விகாரையில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையிலேயே அவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.